வாணலி சூடான பின் எள்ளு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும். சிறிது நேரத்தில் எள்ளு பொடிக்க தொடங்கும். அந்த பததிற்கு வரும் போது எள்ளை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி குளிர வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் வற்றல், கருலேப்பில்லை சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் நன்கு குளிர்ந்த பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பூண்டு பற்கள், பெருங் காயத்தூள், புளி மற்றும் உப்புடன் சேர்த்து நன்கு இட்லி பொடி பததிற்கு அரைக்கவும்
எள்ளு பொடியை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு நன்கு மூடி வைக்கவும்.
காலை சிற்றுண்டி வகைகளுடன் பரிமாறலாம்